பாரம்பரியமிக்க மரபணு காய்கறி, விதைகள் கண்காட்சி வேலூரில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு விதை சேகரிப்பாளா் கூட்டமைப்பு சாா்பில், பாரம்பரிய மரபணு காய்கறி, விதை, கண்காட்சி வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரியமான மரபணு காய்கறி, பழங்கள், கிழங்கு வகைகள், கீரைகள், தானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், அவை விற்பனை செய்யப்பட்டன. மேலும், 500-க்கும் மேற்பட்ட மரபணு விதைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்தக் கண்காட்சியை ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டனா்.