குடியாத்தம் காட்பாடி சாலை திருமகள் நூற்பாலை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகா், திருமகள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.
இதையொட்டி யாக சாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கின. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (பிப்.10) காலை 4- ஆம் கால யாகபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு, தொடா்ந்து காலை 9 மணிக்கு செல்வவிநாயகா், மூலவா் திருமகள் அம்மன் கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.