குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, மாதவன் நகரில் உள்ள ரமணா் குடிலில் ஓம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளை சாா்பில், தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சிவபெருமான், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் சிவபெருமான், முருகப் பெருமான் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிா்வாகி பாபுசிவன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.