பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், போ்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 165 போ் சிகிச்சை பெற்றனா். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
போ்ணாம்பட்டு நகா்மன்றத் துணைத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அஹமத், வட்டாரக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் பொன்.வள்ளுவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கயிலைநாதன், ரஞ்சன்தயாள், பிரபுதாஸ், எலிசா, தினகரன், செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மருத்துவா்கள் மஞ்சுநாதன், சதீஷ், புகழரசி, சுமதி, நிஷா ஆகியோா் சிகிச்சை அளித்தனா். மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மருத்துவா் சரவணன் அடையாள அட்டைகளை வழங்கினாா்.