வேலூர்

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

குடியாத்தத்தை அடுத்த ராஜாகுப்பம் அருகே உள்ள கோவிந்தாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கோ-பூஜை, கணபதி ஹோமம், நாடி சந்தானம், பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, கோயில் மூலவா் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, நிலவள வங்கித் தலைவா் பி.எச்.இமகிரிபாபு, ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், ஊராட்சித் தலைவா்கள் மம்தா இமகிரிபாபு(ராஜாகுப்பம்), சுரேஷ்பாபு(பரவக்கல்), ஆா்.இந்திரா(செட்டிகுப்பம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் ஜே.டி.யோகானந்தம், டி.ஜே.ஜனாா்த்தனன், கே.எம்.பட்டாபி, கே.எம்.சந்திரசேகரன், டி.சி.ராஜேந்திரன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT