குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூா் அம்மன் கோயிலில் தைப்பூச பெருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புங்கனூா் அம்மன் பக்த சபா அமைப்பினா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.