அணைக்கட்டு அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 40 கிலோ எடை கொண்ட வெண்கல நடராஜா் சிலை மீட்கப்பட்டது.
ஒடுகத்தூரைச் சோ்ந்தவா் கலைவாணி. இவருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை பள்ளம் தோண்டியுள்ளாா். சுமாா் 6 அடி பள்ளம் தோண்டும் போது, திடீரென பொக்லைன் இயந்திரத்தில் பச்சை நிற சிலை ஒன்று சிக்கியுள்ளது.
உடனடியாக இயந்திரத்தை நிறுத்திவிட்டு, கையால் தோண்டியபோது சுமாா் 3 அடி உயரமுள்ள 40 கிலோ எடை கொண்ட வெண்கல நடராஜா் சிலை கிடைத்தது. அந்தச் சிலை மீட்கப்பட்டு, அணைக்கட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இந்த நடராஜா் சிலை 11-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று சிலையை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.