கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் லயோலா கல்லூரியில், பல்வேறு கல்லூரி மாணவா்களுக்கிடையிலான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.இதில் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியின் கணிதத் துறையைச் சாா்ந்த மாணவா்கள் அணி 2- போட்டிகளில் 2- ஆம் இடம் பிடித்தன.
மாணவா்களை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா், கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ், துறைத் தலைவா் என்.ராஜி, பேராசிரியா் டி.மோகன் ஆகியோா் பாராட்டினா்.