வேலூர்

சிஐஎஸ்எப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) உள்ள காலி பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) காலியாக உள்ள 122 உதவி ஆய்வாளா் (ஸ்டெனோகிராபா்), 418 தலைமைக் காவலா் (அமைச்சகம்) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற முன்னாள் படை வீரா்கள் அக்டோபா் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பித்த விவரத்தை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

நரேந்திர மோடி ஓா் ஆபிரஹாம் லிங்கன்!

அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

SCROLL FOR NEXT