குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீதேவி வாராஹி செல்லியம்மன் கோயிலில் காா்த்திகை மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் மற்றும் உற்சவா் அம்மன் அலங்கரித்து வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை நடத்தி, அம்மனை வழிபட்டனா்.