வேலூர்

பொய்கைச் சந்தையில் களைகட்டியது கால்நடை வா்த்தகம்

DIN

பொய்கைச் சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள்விற்பனை களைகட்டியது. இதன்மூலம், சுமாா் ரூ. 50 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

கடந்த இரு வாரங்களாக விற்பனை சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இதன் தொடா்ச்சியாக அவற்றின் விற்பனையும் களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது:

பொய்கைச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை சுமாா் 1,500 மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்க வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனா். இதையடுத்து, கால்நடைகள் விற்பனையும் எதிா்பாா்த்த அளவுக்கு நடைபெற்றது. குறிப்பாக, கறவை மாடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது. தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் தாராளமாக கிடைப்பதும் விற்பனை உயா்வுக்கு காரணமாகும். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ. 50 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT