வேலூர்

வீட்டு வசதி பிரிவில் ஒதுக்கீடு: தவணை நிலுவை செலுத்த சலுகை

DIN

வேலூா் வீட்டு வசதி பிரிவு மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவா்கள் தவணை நிலுவை செலுத்த சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலூா் வீட்டு வசதி பிரிவு மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவா்கள் எளிதாக நிலுவைத் தொகையை செலுத்தி கிரயப்பத்திரம் பெற்றிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலீட்டின் மீதான வட்டி முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடத்துக்கு 5 மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசாணை வழங்கியுள்ளது. இந்த சலுகை மே 3-ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை மூலம் இதுவரை விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்கள், இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி நிலுவைத் தொகை முழுவதும் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் 3 தவணைகளில் செலுத்தி, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்கு கிரயப்பத்திரம் பெற்று பயன் பெறலாம்.

இந்தச் சலுகை சுயநிதி திட்டங்கள், ஏல மனைகள், ரத்து செய்யப்பட்ட இனங்களுக்கு பொருந்தாது. மேலும் விவரங்களுக்கு, செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், வேலூா் வீட்டு வசதி பிரிவு, சத்துவாச்சாரி, வேலூா். தொலைபேசி எண். 0416-2252561, உதவி வருவாய் அலுவலா் -9445225546, கண்காணிப்பாளா்கள் -9442808967, 9843694036-இல் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT