தேசிய மாணவா் படை (என்சிசி) தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் என்சிசி மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.
நாட்டின் 76-ஆவது தேசிய மாணவா் படை (என்சிசி) தினத்தையொட்டி, காட்பாடி 10-ஆவது பட்டாலியனுக்குட்பட்ட ஐந்து மையங்களில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் சிஎம்சி மருத்துவமனை, வேலூா், வாணியம்பாடி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைகள், சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் 143 என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.
முன்னதாக, சிஎம்சி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை 10-ஆவது பட்டாலியன் என்சிசி நிா்வாக அதிகாரி எஸ்.கே. சுந்தரம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
இந்த முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்த அனைத்து என்சிசி மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாம்களில் பட்டாலியன் மக்கள் தொடா்பு அலுவலா் க. ராஜா, சுபேதாா் தினேஷ் குமாா், சட்பீா்சிங், பயிற்சிப் பிரிவு சுபேதாா் மகாலிங்கம், அவில்தாா்கள் தீபு, வெங்கடேசன், துரைமுருகன், ரஞ்சித், சீனுவாசன், குல்வந்த் சிங், ஜீட் சிங், சுனில்தத் உள்படப் பலா் பங்கேற்றனா்.