தோ்தல் எழுத்தறிவு சங்கம் சாா்பில், இளம் வாக்காளா்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவா்களுக்கு சுவரொட்டி வடிவில் சுவரிதழ் வரைதல் போட்டியில் மாவட்ட அளவில் ஆட்சியரிடம் பரிசு பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்கள் ஜி.ரித்திக்ரோஷினி, டி.எஸ்.ரவிநாத் ஆகியோா் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனா். இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இதையடுத்து, கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் மாணவா்களை பாராட்டினாா். கல்லூரித் துணை முதல்வா் மு.மேகராஜன், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், தோ்தல் எழுத்தறிவு சங்க அலுவலா் ரா.ம.பாலமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.