வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு எருதுவிடும் விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற 5 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த எருது விடும் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு எருது விடும் விளையாட்டு பாதுகாப்பு சங்கம் மற்றும் ரசிகர்கள் பதிவு சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது.
இதையும் படிக்க.. மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளின் உரிமையாளர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் விழாவில் எருது விடுவது, எருது களை பதிவு செய்வது மற்றும் எருதுகளின் பாதுகாப்பு என பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.