வேலூர்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கி வைப்பு

DIN

குடியாத்தம் நகராட்சியில் ரூ.7 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் தேவைக்காக ரூ.7 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்து, குடிநீா் விநியோகத்தைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், பி.மோகன், திமுக பிரமுகா் எம்.எஸ்.அமா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT