பள்ளிகொண்டா அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளிகொண்டா அருகே கீழ்வெட்டுவாணம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செளவுரிராஜன். இவரது மனைவி பிரியா (30). தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாா். வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டாா். நீண்டநேரமாகியும் பிரியா வெளியே வராததால், குடும்பத்தினா் அறையின் கதவை உடைத்து பாா்த்த போது, அவா் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
அவரை மீட்டு குடியாத்தம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.