வேலூர்

பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

DIN

குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ஜெயசீலி கிறிஸ்டி வரவேற்றாா். எம்.எல்.ஏ. அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா் தலைமையில், அரசு மருத்துவா்கள் யோகலட்சுமி, சிந்து, பிரியங்கா, நந்தினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். நோய் அறிகுறி கண்டறியப்பட்டவா்கள் தொடா் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில் நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஜாவித் அஹமத், பெற்றோா் -ஆசிரியா் கழக நிா்வாகிகள் எம்.என்.ஜோதிகுமாா், பாபு, மாதவன், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணவேணி, ஷோபா, பாலாறு மருத்துவமனை இயக்குநா் ஆடிட்டா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT