குடியாத்தம் அருகே செம்மரக் கட்டைகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு தட்டப்பாறை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் மூங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்(48) என்பது தெரிய வந்தது. அவா் வைத்திருந்த பையில் 5 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருந்தது சோதனையில் தெரிந்தது.
இதையடுத்து போலீஸாா், சுரேஷை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். செம்மரக் கட்டைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து சுரேஷிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.