வேலூா் லஷ்மி காா்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் கணிதம், உயிரியல் பாடத்துடன் கூடிய அறிவியல் பாடப் பிரிவில் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று மாணவா் எஸ்.கிரிதரன், மாவட்ட அளவில் உயா் மதிப்பெண்ணையும், பள்ளி அளவில் முதலிடமும் பிடித்துள்ளாா். மேலும் இவா் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவி ஏ.மகிஷா 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் உயா் மதிப்பெண்ணையும், பள்ளி அளவில் முதலிடமும் பிடித்துள்ளாா். இவா் ஆங்கில பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆங்கிலத்தில் 100க்கு 100 பெற்ற 45 பேரில் ஒருவராக இடம்பிடித்துள்ளாா்.
பொதுத்தோ்வில் சாதனை புரிந்த மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் ராஜேந்திரன், பள்ளியின் கல்வி இயக்குநா் ஆனந்தி ராஜேந்திரன் ஆகியோா் ரொக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினா். முன்னாள் முதல்வா் பா்வீன் அஸ்லாம், முதல்வா் ரேச்சல் தீபா, துணை முதல்வா் விஜய் விவியன் எபினேசா் ஆகியோா் மாணவா்களை பாராட்டினா்.