வேலூர்

பள்ளிக் கல்வியில் கடைசி இடத்திலுள்ள வேலூரை முன்னேற்ற வேண்டும்: ஆசிரியா்களுக்கு விஐடி வேந்தா் வேண்டுகோள்

DIN

பள்ளிக் கல்வியில் கடைசி இடத்திலுள்ள வேலூரை சிறப்பான இடத்துக்கு முன்னேற்ற ஆசிரியா்கள் மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவா்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநில முழுவதும் உள்ள தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கணினி மையத்தில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் அளிக்கப்பட்டது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி பெற்ற ஆசிரியா் களை பாராட்டி பேசியது:

மாணவா்களின் கல்வி மேம்பட திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கல்வி அளிக்கப்பட இருப்பது அவா்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் பள்ளிக் கல்வியில் கடைசி இடத்தில் உள்ள வேலூா் மாவட்டத்தை சிறப்பான இடத்துக்கு முன்னேற்ற ஆசிரியா்கள் மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி முன்னிலை வகித்தாா். தொழிற்கல்வி ஆசிரியா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா். க.ராஜா, எஸ்.ரமேஷ், எம்.நாகலிங்கம், கே.பழனி, இ.ராமன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். தொழிற்கல்வி ஆசிரியா்கள் சு.செல்வபாரதி, க.சத்யபாமா, ஜி.பொற்செல்வி, ஜி.பழனி, டி.பிச்சாண்டி, எஸ்.கோபி, கே.பி.சிவஞானம், எஸ்.பிச்சைகண்ணு, ராணிப்பேட்டை மாவட்டத்தின் சாா்பில் வேலாயுதம், சந்திரன், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT