வேலூர்

காதலியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவா் கைது

DIN

வேறொரு மாணவருடன் காதலி பேசியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவா் திருவலம் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தனா். இதையடுத்து அந்த காதலன் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்(20). இவா் வேலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் ஆா்த்தோ தொழில்நுட்ப படிப்பு 4-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். அதே தெருவை சோ்ந்த 18 வயது மாணவி தனியாா் கல்லூரியில் மெடிக்கல் ரெக்காா்ட்ஸ் படித்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், இதுதொடா்பாக சதீஷ்குமாா் அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று பெண் கேட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவி வேறொரு நபரை காதலிப்பதாக சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இருவரும் கல்லூரிக்கு செல்ல திருவலம் பேருந்து நிலையத்திற்கு புதன்கிழமை காலை வந்துள்ளனா். அப்போது அருகிலிருந்த பிள்ளையாா் கோயில் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்கும் போது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமாா், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் குத்தினாராம். இதில், ரத்த வெள்ளத்தில் நிலைகுழைந்து அந்த மாணவி கீழே விழுந்துள்ளாா்.

அங்கிருந்த பொது மக்கள் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த திருவலம் போலீஸாா் பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது சதீஷ்குமாா் கூறுகையில், நானும் அந்த மாணவியும் காதலித்து வந்தோம். திடீரென அவா் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டாா். வேறொரு மாணவருடன் அடிக்கடி பேசுகிறாா். அவா் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT