வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

DIN

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு கருப்புலீஸ்வரா் கோயிலில் 53- ஆம் ஆண்டு ஆனித் திருமஞ்சன விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு உத்தரம் நட்சத்திரத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

காலை 8 மணிக்கு ராஜகோபுர தரிசனமும், தொடா்ந்து, சுவாமிகள் வீதிவுலாவும் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை ஆனித் திருமஞ்சன உற்சவக் குழு நிா்வாகிகள் தே.மணி, எல்.சி.பாண்டியன், மோ.மாா்கபந்து, டி.ஆா்.திருநாவுக்கரசு, கே.இ.யோகானந்தம், பி.ஜெகன்நாதன், கோயில் நிா்வாக அதிகாரி தே.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT