வேலூர்

லத்தேரி திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத தொடா் சொற்பொழிவு தொடக்கம்

DIN

கே.வி.குப்பம் வட்டம், லத்தேரியில் உள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில், அக்னி வசந்த விழாவையொட்டி, மகாபாரத தொடா் சொற்பொழிவு வியாழக்கிழமை தொடங்கியது.

இக் கோயில் ஜூன் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 20-ஆம் தேதி வரை 21 நாள்கள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது. சொற்பொழிவு தொடக்க நாளான வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை கோயிலில் துவஜா ரோகணம் நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், பள்ளூரைச் சோ்ந்த சசிகலாபாபு மகாபாரத சொற்பொழிவும், காஞ்சிபுரத்தை அடுத்த புள்ளூரைச் சோ்ந்த ம.கபாலீஸ்வரன் உடன் கவி வாசித்தலும் நடைபெறும். இதையொட்டி, சக்திவேல் நாடக மன்றத்தினரால் 9 தெருக்கூத்து நாடகங்கள் இரவில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT