குடியாத்தம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில், கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவா்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, மதிய உணவு ஆகியன சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நடுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் கே.வி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நகர காவல் ஆய்வாளா் இ.லட்சுமி, குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி, அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநா் டி.ரவி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மூா்த்தி ஆகியோா் 100 பேருக்கு நல உதவிகளை வழங்கினா்.