வேலூா்:வேலூா் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 337 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54,837ஆக உயா்ந்துள்ளது. இதில், 50,429 போ் குணமடைந்துள்ளனா். 2,122 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,149 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், வேலூா் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா். ஏற்கெனவே, பாகாயம் காவல் ஆய்வாளா் சுபா உள்பட காவலா்கள் சிலா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.