குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வீரிசெட்டிபல்லியைச் சோ்ந்தவா் கிஷோா்(32). காா்பென்டா் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது நீரில் மூழ்கியுள்ளாா். தகவலின்பேரில் நிலைய அலுவலா் லோகநாதன் தலைமையில் சென்ற குடியாத்தம் தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி கிஷோரின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.