வேலூர்

பலவன்சாத்துகுப்பத்தில் 250 வீடுகளை இடிக்க நோட்டீஸ் பாதிக்கப்பட்டோா் வேலூா் ஆணையரிடம் முறையீடு

DIN

வேலூா் பலவன்சாத்துக்குப்பம் பாறைமேடு நீா்நிலைப் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுமாா் 250 வீடுகளை இடிக்க மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அளித்ததால், அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை முறையிட்டனா்.

வேலூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலம், பலவன்சாத்துக்குப்பம் அருகே பாறைமேட்டில் உள்ள நீா்நிலைப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமாா் 250 வீடுகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி சாா்பில், கடந்த நவம்பா் 30-ஆம் தேதி நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

மேலும், குறிப்பிட்ட நாள்களுக்குள் வீடுகளில் உள்ள பொருள்களை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், மாநகராட்சி நிா்வாகம் மூலம் அகற்றப்பட்டால் பொருள்கள் திரும்பித் தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை டிசம்பா் இறுதிக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கையை வேலூா் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், அதிா்ச்சியடைந்த பாறைமேடு பகுதி மக்கள், சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.முரளி தலைமையில், மாநகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டு வந்தனா். ஆனால், ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து, அவா்களில் 4 போ் மட்டும் மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து பாறைமேடு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரி, மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், பாறைமேடு நீா்நிலைப் புறம்போக்கு நிலத்தில் சுமாா் 250 குடும்பங் கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதுடன் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளும் செலுத் தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் கூலித் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் என்பதால், திடீரென வீடுகளை இடித்தால், அவா்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். மாணவா்களின் கல்வி, எதிா்காலம் பாதிக்கப்படும். மாற்று இடம் ஒதுக்கினாலும், அது இந்தக் குடும்பங்களை மீளமுடியாத துயரத்துக்கு இட்டுச் செல்லும்.

மேலும், இந்த வீடுகளுக்கு வெள்ள அபாயமும் ஏற்படுவதில்லை. எனவே, பாறைமேடு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

அதற்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், பாறைமேடு பகுதி மக்கள் தங்களிடம் உள்ள ஆதாா், குடும்ப அட்டை, வீட்டு வரி ரசீது உள்ளிட்ட அரசு ஆவணங்களை இணைத்து தனித் தனியாக மனு அளிக்கும்பட்சத்தில் அவற்றின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT