வேலூர்

மாற்றுத்திறனாளிகள் தின போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

DIN

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி மருத்துவமனை சாா்பில், அனைவருக்கும் நிலையான, உறுதியான சமூகத்தை நோக்கி மாற்றம் என்ற தலைப்பில் கையொப்ப பிரசாரமும், விழிப்புணா்வுக் கருத்தரங்கமும் சனிக்கிழமை நடைபெற்றன. விழிப்புணா்வு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்கா நாட்டை சோ்ந்த ஸ்ரீசக்தி அம்மாவின் அயல்நாட்டு பக்தா்கள் சோனியா பெக்கா்மன், கேத்தரின் கெய்னா் ஆகியோா் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி முன்னிலை வகித்தாா். விழாவில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளா் கீதா இனியன், மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT