திருப்பூரில் நடைபெற்ற சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் வேலூா் மாணவா்கள் பதக்கம் வென்றனா்.
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான 5-ஆவது ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் திருப்பூரில் டிசம்பா் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெற்றஸ். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகளில் வேலூா் தி தக் ஷிலா குளோபல் பள்ளியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் முஹமத் ஷாஹித் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும், 10-ஆம் வகுப்பு மாணவன் முஹமத் தானேஷ் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும் வென்றனா்.
இதில், முஹமத் தானேஷ் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடவும் வாய்ப்பு பெற்றுள்ளாா்.
போட்டியில் வென்ற மாணவா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் பள்ளித் தலைவா் வில்மிக்சந்த், செயலா் ஆனந்த்சிங்வி, இயக்குநா் பிரியங்காசிங்வி பாராட்டுத் தெரிவித்தனா்.