குடியாத்தம் ஸ்ரீஅபிராமி சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் லதா ஜேக்கப் வரவேற்றாா்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் துணைத் தலைவா் எம்.பிரகாசம், பொருளாளா் கே.முருகவேல், இயக்குநா்கள் எம்.கோபிநாத், ஜோதிகுமாா், மான்மல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் மேகனா, கே.எம்.சாமி, கராத்தே பயிற்சியாளா் யுவராஜ் ஆகியோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.