அமிா்தி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்டம், அமிா்தி அருகே உள்ள சஞ்சிபுதூா் பகுதியில் வேலூா் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (24) என்பவா் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. வனத் துறையினா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் வைத்திருந்தது கள்ளத் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. துப்பாக்கியை வனத் துறையினா் பறிமுதல் செய்ததுடன், இதுதொடா்பாக குமாரை கைது செய்தனா்.