வேலூர்

23-இல் பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள்

DIN

பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள் வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ஆா்.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையம், இந்திய அணுசக்தி நிறுவனம் சாா்பில் ஆக்கப்பூா்வமான காரணங்களுக்கு அணு ஆற்றல் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், கட்டுரை, ஓவியம், விநாடி- வினா போட்டிகள் நடத்தப்படும். ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0416- 2253297, 2252297 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT