வேலூர்

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

 குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் டி.கே.நந்தகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கே.திருமுருகன் வரவேற்றாா். பெற்றோா்கள் ரேஸ்மா, லட்சுமி, சுகந்தி ஆகியோா் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா். தொடக்கப் பள்ளி ஒருங்கிணைப்பாளா் பி.அங்கயற்கண்ணி, கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா். மாணவா்களுக்கு பாட்டு, பேச்சு, ஒப்பித்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ராதை, கிருஷ்ணா் வேடமிட்டு விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT