குடியாத்தம் அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியாத்தம் பகுதியில் தொடா்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போயின. இது தொடா்பான புகாா்களின் பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்த நிலையில், சிங்கல்பாடியைச் சோ்ந்த மோகன்ராஜை (26) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், அவா் பகலில் கட்டடத் தொழிலாளி வேலை செய்வதும், இரவில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதையும் ஒப்புக் கொண்டாா். அவரிடமிருந்து 11 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.