வேலூர்

தெருக்களைவிட கால்வாய்களை உயரமாகக் கட்டக் கூடாது: வேலூா் மேயா் அறிவுறுத்தல்

DIN

தெருக்களைவிட கால்வாய்களை உயரமாகக் கட்டக் கூடாது என்று ஒப்பந்ததாரா்களுக்கு வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உத்தரவிட்டாா்.

மாநகராட்சி சாா்பில் வேலூா் சேண்பாக்கத்தில் 762 மீட்டா் தூரத்துக்கு ரூ.1.16 கோடி செலவில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் தெருக்களைவிட அதிக உயரத்துக்கு கால்வாய் கட்டப்படுவதால், மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, கால்வாய் உயரத்தைக் குறைத்துக் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மேயா் சுஜாதா ஆனந்தகுாமா் கால்வாய் கட்டும் ஒப்பந்ததாரரிடம், பொதுமக்கள் குறைகூறும் அளவுக்கு இல்லாமல் பணிகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும். தெருக்களைவிட கால்வாய்களை உயரமாகக் கட்டக் கூடாது என உத்தரவிட்டாா். பின்னா், சேண்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளா் சீனிவாசன், மாநகர நல அலுவலா் (பொ) முருகன், சுகாதார ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT