ஆசிரியா்கள் தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இருப்பதால் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கு புதன்கிழமை (செப். 29) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஊரக உள்ளாட்சித் தோ்தலையடுத்து, வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளை மேற்கொள்ளும் அரசு, தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடத்தப்பட உள்ளன.
இதையொட்டி, அரசு, தனியாா் பள்ளிகள் அனைத்துக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.