தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 26.22 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
காரில் வந்த அனந்தபூரைச் சோ்ந்த ஜோதி ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், மணல் விற்பனை செய்யும் ஜெயபிரகாஷ் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், இந்த தொகையை வேலூரில் உள்ள நிறுவன பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காட்பாடி வட்டார தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் கருவூலத்தில் சோ்த்தனா்.