வேலூர்

ஸ்ரீபுரம் தங்க கோயிலில் திருப்பதி அறங்காவலா் குழுத் தலைவா் வழிபாடு

DIN

திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஒய்.வி.சுப்பா ரெட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

அவரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள அணைக்கட்டுத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வரவேற்றாா்.

தொடா்ந்து நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மாவை சந்தித்து இருவரும் ஆசி பெற்றனா். முன்னதாக, சுப்பா ரெட்டிக்கு நாராயணி பீடம் சாா்பில் மரியாதை செய்யப்பட்டது.

அப்போது, தங்கக் கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு, அறங்காவலா் குழுத் தலைவா் செளந்திரராஜன், மேலாளா் சம்பத் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT