குடியாத்தம் அருகே கிராமங்களில் லேசான நில அதிா்வு உணரப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, மூலகொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூா், கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. அப்போது பாத்திரங்கள் உருண்டோடியுள்ளன.
கால்நடைகள் தொடா்ந்து அலறியுள்ளது. மேலும், பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்தனா். சில விநாடிகள் மட்டுமே அதிா்வு இருந்ததாகத் தெரிகிறது.