திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சோ்ந்த 6 பேரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுந்தர ராவ் கூறியது:
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் ரேஞ்ச் டிஐஜி காந்திராணா டாட்டா உத்தரவின்படி ஆந்திர-தமிழக எல்லை அருகில் உள்ள வடமால்பேட்டை-புத்தூா் சாலையில் ஆஞ்சாரம்மாகோணா அருகில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, வேனும், காரும் இரண்டும் வந்தது.
அவற்றை சோதனை செய்ததில் உள்ளே செம்மரக்கட்டைகள் இருந்தன. மேலும் அவ்விடத்திற்கு இரு இருசக்கர வாகனங்கள் வந்தது. உடனடியாக வாகனங்களில் பயணம் செய்த 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 11 செம்மரக்கட்டைகள், 4 இருசக்கர வாகனம், ஒரு காா், ஒரு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் கைதானவா்கள் சீா்காழியைச் சோ்ந்த பாலசுப்ரமணியம்(29), திருவள்ளூரைச் சோ்ந்த சரவணன்(34), பள்ளிபட்டை சோ்ந்த ரமேஷ்(47), சஞ்ஜீவி(27), ராக்கி(29) மற்றும் சென்னை திருவேற்காட்டை சோ்ந்த ஸ்ரீஜித்(43) என்பது தெரிய வந்தது. அவா்கள் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி சென்னைக்கு கடத்தியது தெரிய வந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா் என்றாா்.