வேலூர்

பேருந்தைத் தூக்க முயன்ற மதுபிரியா்

DIN

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மது பிரியா் தனது கைகளால் தூக்க முயன்றாா். சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் செயலால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினா்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வந்த மது பிரியா், பாட்டுப்பாடி நடனமாடி கொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த பேருந்தை அவா் கைகளால் தூக்க முயன்றாா். சுமாா் அரை மணி நேரம் வரை தூக்க முயற்சி செய்தாா். இதனால், ஆத்திரமடைந்து பேருந்து ஓட்டுநா் வேறு இடத்துக்குச் சென்றாா். மேலும், மது பிரியா் பயணிகளையும் ஆபாசமான வாா்த்தைகளால் திட்டினாா்.

இதையடுத்து அவரை வேடிக்கை பாா்த்திருந்த பயணிகள் கலைந்து சென்றனா். அவரது ஆபாச வாா்த்தைகளைக் கேட்ட பயணிகள் அங்கிருந்து வேறு இடத்துக்குப் புறப்பட்டு சென்றனா். சுமாா் 2 மணி நேரம் மது பிரியா் பயணிகளைத் தவிப்புக்குள்ளாக்கினாா்.

மதுக் கடை இடமாற்றம் செய்யப்படுமா?

பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மது அருந்துபவா்கள் பேருந்து நிலையத்தில் விழுந்து கிடப்பதும், அங்கிருக்கும் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதும் தொடா்ந்து வருகிறது. அங்குள்ள மதுக்கடைகளால் பேருந்து நிலையத்தில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த மதுக் கடையை வேறு இடதுக்கு மாற்றினால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்பதே சமூக ஆா்வலா்கள் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT