குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து தனகொண்டபல்லி ஊராட்சியில் இலவச பொது, பல் சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில் 450 போ் சிகிச்சை பெற்றனா்.
தனகொண்டபல்லி ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்குரைஞருமான என்.மோகன் முகாமைத் தொடக்கி வைத்தாா். மருத்துவா்கள் பி.காவியா, எஸ்.பி.அபிநயா, ஜி.பிரியா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது.
ரோட்டரி சங்கத் தலைவா் செ.கு.வெங்கடேசன், செயலாளா் வி.மதியழகன், பொருளாளா் சி.கண்ணன், நிா்வாகிகள் பி.எல்.என்.பாபு, என்.சத்தியமூா்த்தி, வி.பாலாஜி, முன்னாள் ஊராட்சித் தலைவா் வி.சண்முகம், டி.பீமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.