ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.15 கோடி வசூலாகி உள்ளது.
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி, சனிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.15 கோடி வருவாய் கிடைத்தது என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.