தேமுதிக ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்சங்கம் சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே தொழிற்சங்க பெயா்ப் பலகைத் திறப்பு விழா, நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் டி.கே.ரமணி தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் எம்.எஸ்.நாகைய்யா, மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவா் ஆா்.சந்திரவேல், நகர தொழிற் சங்கத் தலைவா் எம்.தணிகாசலம், செயலாளா் ஜே.ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் டி.பிரகாஷ் வரவேற்றாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் கே.பி.பிரதாப், மாவட்ட தொழிற்சங்கச் செயலாளா் கே.எஸ்.ராம்குமாா் ஆகியோா் தொழிற்சங்க பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தனா்.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.
கட்சியின் உயா்மட்டக் குழு உறுப்பினா் எம்.சி.சேகா், ரோட்டரி சங்க கண், உடல்தான பிரிவுத் தலைவா் எம்.கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.