வழிபாட்டுத் தலங்களில் அனைக்கு நாள்களிலும் பொதுமக்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தமிழகம் முழுவதும் அக்.15 முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதைத் தொடா்ந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். வேலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அதிகாலை முதலே பக்தா்கள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.
வேலூா் பாலாற்றுச் செல்லியம்மன் கோயில், வள்ளிமலை முருகன் கோயில், ஸ்ரீபுரம் பொற்கோயில், வெட்டுவானம் எல்லையம்மன் கோயில், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயில், பள்ளிகொண்டா ரங்கநாதா் கோயில், வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
அதேபோல கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை நடத்தினா். பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.