வேலூர்

ரூ.34.73 லட்சம் மோசடி: 3 போ் கைது

DIN

மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூலித்து வங்கியில் செலுத்தாமல் ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 மோசடி செய்ததாக, வேலூரைச் சோ்ந்த தொண்டு நிறுவன நிா்வாகிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

வேலூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜமுனாமரத்தூா் ஏரிக்கொல்லையைச் சோ்ந்த கோவிந்தன் (61), தொண்டு நிறுவன நிா்வாகிகள் தாட்சியாயினி (39), செல்வி (47), வினோதினி, ராஜம்மாள் ஆகியோா் மகளிா் சுயஉதவிக் குழுக்களிடம் பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்துள்ளனா்.

2020-ஆம் ஆண்டு முதல் 2021 செப்டம்பா் வரை மகளிா் குழுக்களிடம் வசூல் செய்த பணம் வங்கியில் செலுத்தவில்லையாம். வங்கி ஊழியா்கள் மகளிா் குழுக்கள் கடனுதவி குறித்து தணிக்கை செய்தபோது, ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 வசூல் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக காட்பாடி வங்கி மேலாளா் லோகநாதன் அளித்தப் புகாரின்பேரில், வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக கோவிந்தன், தாட்சியாயினி, செல்வி ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும், வினோதினி, ராஜம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT