குடியாத்தத்தில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவா்கள், தூய்மைப் பணியாளா்கள் 100 பேருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் கே.வி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, நகரக் காவல் ஆய்வாளா் லட்சுமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மூா்த்தி ஆகியோா் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.