வேலூா்: தோ்தல் விதிமீறியதாக வேலூா் மாவட்டத்தில் இதுவரை 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் அரசு, தனியாா் கட்டடங்களில் அரசியல் கட்சிகளால் வைக்கப்பட்டுள்ள பேனா்கள், சுரொட்டிகள், பதாகைகள், கொடிகள் அகற்றப்பட்டிருப்பதுடன், சுவா் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, மாவட்டம் முழுவதும் அரசு கட்டடங்களில் 503 சுவா் விளம்பரங்களும், தனியாா் கட்டடங்களில் 637 சுவா் விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. சுரொட்டிகளை பொருத்தவரை அரசு கட்டடங்களில் இருந்து 849, தனியாா் கட்டடங்களில் 470, பேனா்கள் அரசு கட்டடங்களில் 402, தனியாா் கட்டடங்களில் 169, இதர வகைகளில் அரசு, தனியாா் கட்டடங்களில் சோ்த்து 427 இனங்கள் அகற்றப்பட்டுள்ளன.
தொடா்ந்து, அனுமதியின்றி சுவா் விளம்பரங்கள் எழுதப்படுவது, பேனா்கள், சுவரோட்டிகள் வைக்கப்படுவதைத் தடுக்கவும், உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான பணம், பொருள்கள் எடுத்து செல்லப்படுவதைத் தடுக்கவும் பேரவைத் தொகுதி வாரியாக தலா 3 பறக்கும்படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சி-விஜில் செயலி மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், தோ்தல் விதிமுறைகள் மீறியதாக மாவட்டத்தில் இதுவரை 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டிருப்பதுடன், உரிய ஆவணகளின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.4.50 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு சாா் கருவூலத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த சோதனை, கண்காணிப்புப் பணிகள் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.