வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்தியா ஜப்பான் லைட்டிங் என்கிற சென்னை நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி தலைவா் என்.ரமேஷ் தொடக்கி வைத்தாா். கல்லூரி துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.
முகாமில், இந்தியா ஜப்பான் லைட்டிங் நிறுவனத்தின் துணை மேலாளா் (உற்பத்திப் பிரிவு) ஜாபா், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு மேலாளா் சாண்டி ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளை தோ்வு செய்தனா்.
இந்நிறுவனம் சென்னை புதுச்சத்திரத்தில் இயங்கி வருகிறது. ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான ஹெட் பல்புகள் தயாரித்து டொயோட்டா, நிஸான், ஃபோா்டு, யமஹா, எம்என்சி நிறுவனங்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
முகாமில் சுமாா் 52 போ் பங்கேற்றதில், 41 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாதம் ரூ. 13 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளம் பெறுவா். உணவு, மருத்துவக் காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனகல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி அருண்குமாா் தெரிவித்தாா்.